போர்க்களமான அண்ணாசாலை... 3 மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது!
தொடர் போராட்டங்களால் போர்க்களமான அண்ணாசாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
Recommended Video

சென்னை : சென்னை ஐபிஎல் போட்டியை எதிர்த்து தொடர்ந்து அண்ணாசாலையில் பிரமாண்டமாக புரட்சி நடைபெற்றதால் போக்குவரத்து 3 மணிநேரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் போராட்டக்காரர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து இன்று சென்னையில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியை ரத்து செய்யக்கோரி பல அமைப்புகள் கோரிக்கை வைத்தன. ஆனால், போட்டி ரத்து செய்யப்படாது எனவும், சென்னையில் தான் நடக்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்தது.

இதனையடுத்து ஐபிஎல் போட்டி நடக்க இருக்கும் சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக பல அமைப்புகள் தெரிவித்தன. நாம் தமிழர் கட்சி, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம், எஸ்.டி.பி.ஐ கட்சி உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அண்ணாசாலையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து போராட்டம் நடத்தினர். இதனால் 3 மணிநேரத்துக்கும் மேலமாக அண்ணாசாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது அப்பகுதிய்8இல் இயல்பு நிலைமை திரும்பியது.












Click it and Unblock the Notifications