மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மளமள உயர்வு.. தஞ்சை மாவட்டம் வரை வெள்ள எச்சரிக்கை
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணையிலிருது இரவு 8 மணிக்கு 65 ஆயிரம் கண அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் இரவு 9 மணிக்கு 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாலும் காவிரிக் கரையோர மக்களுக்கு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. கர்நாடகாவின் கேஆர்எஸ் அணையிலிருந்து தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட 20 ஆயிரம் கன அடி நீர் பின்னர் 40 ஆயிரம் கன அடியாகவும் பின்னர், இன்று இரவு 8 மணிக்கு வினாடிக்கு, 65 ஆயிரம் கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இரவு 9 மணிக்கு நீர் திறப்பு 75 ஆயிரம் கன அடியாகவும், 10 மணிக்கு 80,000 கன அடியாகவும் அதிகரிக்க உள்ளதாக மேட்டூர் அணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து 75 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டால், காவிரிக் கரையோரப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அதனால், காவிரிக்கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் கூடும் இடங்களான சோமரசம்பேட்டை, முக்கொம்பு, அம்மாமண்டபம், கல்லனை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்காதபடி பாதுகாப்பு நடவடிக்க்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதே போல, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications