தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியே தீருவோம்.. பொன்.ராதாகிருஷ்ணன் அடாவடி!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியே தீருவோம் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றி விட்டது என அவர் கூறினார்.

we should take over the government in Tamil Nadu: Pon Radhakirshnan

பாரதிய ஜனதா ஆட்சி தமிழகத்தில் அமைந்தே தீரும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் ஆட்சியை கலைத்து விட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வருவதில்லை என்றும் அவர் கூறினார்.

எந்த மாநில அரசையும் கலைக்கும் திட்டம் பாஜகவுக்கு கிடையாது என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியே தீரும் என திட்டவட்டமாக கூறினார்.

மேலும் கருணாநிதியை ஏமாற்றுவதற்காக ஸ்டாலின் வைரவிழா நடத்துகிறார் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழக அரசு நடவடிக்கை கல்வித்துறையில் சிறப்பாக உள்ளது என்று கூறிய அவர் அதே நேரத்தில் வண்டல் மண் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+