திண்டுக்கல் சீனிவாசன் தலைமை கழகத்துக்குள் வந்தால் தாக்குவோம்.. எம்ஜிஆர் மன்றத்தினர் ஆவேசம்: வீடியோ
எம்ஜிஆர் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை கட்சியில் இருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளர்கள் ஆவேசத்துடன் கூறியுள்ளன
சென்னை: திண்டுக்கல் சீனிவாசனை கட்சியை விட்டு நீக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என எம்ஜிஆர் மன்ற முன்னாள் தலைவர் ஓம்பொடி பிரசாத் கூறியுள்ளார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட மதுரையில் அடிக்கல் நாட்டு நடைபெற்ற போது செய்தியாளர்களிடம் எம்ஜிஆரை மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

இந்தக் கருத்து தற்போது சர்ச்சையையும் அமைச்சர் சீனிவாசனுக்கு பலத்தை எதிர்ப்பையும் உருவாக்கி வருகிறது. திண்டுக்கல் சீனிவாசன் தான் அப்படி சொல்லவில்லை என மறுப்பு தெரிவித்தும் எம்ஜிஆர் ரசிகர்களும் எம்ஜிஆர் மன்றத்தினரும் பயங்கர கொதிப்புடன் உள்ளார்கள்.
இந்நிலையில் வடசென்னை எம்ஜிஆர் மன்ற முன்னாள் தலைவர் ஓம்பொடி பிரசாத் செய்தியாளர்களிடம்கூறுகையில், அமைச்சர் திண்டுக்கல்சீனிவாசனின் இந்தக் கருத்து எங்களை மிகவும் புண்படுத்தியுள்ளது. அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டு, கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
எம்ஜிஆர் நிறுவிய கட்சியில் இருந்துகொண்டு,அவருடைய இரட்டை இலைச் சின்னத்தால் அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டு எம்ஜிஆர் புகழுக்கு களங்கம்கற்பித்த திண்டுக்கல் சீனிவாசன் தலைமை கழகத்துக்குள் இனி வர்வே கூடாது. ஒருவேளை அவர் வந்தால் நிச்சயம் எம்ஜிஆர் மன்றத்தினர் அவரைத் தாக்குவோம் என பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருக்கும் பிரச்சனைகள் போதவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் கட்சிக்குள்ளேயே புதுப்பிரச்சனையை கொண்டு வந்துவிட்டாரே என அதிமுக தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications