தமிழகத்தில் மோடி போட்டியிட்டால் எந்த தொகுதியையும் விட்டுக்கொடுப்போம் : விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், எந்த தொகுதியை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்போம் என விஜயகாந்த் கூறினார்.

லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

We will give up any seat for Modi if he decides to contest in TN, says Vijayakanth

அப்போது பேசிய அவர், கூறியதாவது:

''கன்னியாகுமரியில் பெரும்பாலானவர்கள் மீனவர்களாக இருக்கின்றனர். அந்த மீனவர்களுக்காக கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என ஜெயலலிதா உறுதி அளித்திருந்தார். ஆனால், அவர் கூறியபடி இதுவரை ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படவில்லை.

அதேபோல், ரப்பர் தோட்ட தொழில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்காக இதுவரை ஆண்ட அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எந்த நன்மையும் செய்யவில்லை. மேலும், பட்டா உள்ள நிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டுவதற்குகூட தமிழக அரசு அனுமதி தர மறுக்கிறது.

தமிழக மீனவர்களின் பிரச்னையை தீர்ப்போம் என பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், எந்த தொகுதியை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்போம். மோடி பிரதமராக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+