For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி உங்களை கிண்டல் செய்யவே மாட்டோம் ரமணன் சார்: சென்னை மக்கள்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணனை இனி கிண்டல் செய்யவே கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர் சென்னை மக்கள்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியிட்டால் மக்கள் அவரை சமூக வலைதளங்களில் கண்டமேனிக்கு கிண்டல் செய்து வந்தனர். இவர் இப்படி தான் மழை வரும் என்பார், நாமும் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம் கடைசியில் வெயில் தான் கொளுத்தும் என்று கிண்டல் செய்தனர்.

We won't make fun of you Ramanan sir: Chennai people

இந்நிலையில் தான் ரமணன் தற்போது எப்பொழுது எல்லாம் மழை பெய்யும் என்று கூறிகிறாரோ அப்பொழுது எல்லாம் மழை பெய்து கொண்டிருக்கிறது. வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை மக்களுக்கு ரமணனின் வாக்கு பலித்துக் கொண்டிருப்பதை பார்த்து பயம் வந்துள்ளது.

ரமணன் சார் ஃபுல் பார்மில் இருப்பது நமக்கு நல்லது இல்லை அதனால் இனி அவரை கிண்டல் செய்யக் கூடாது என்ற முடிவுக்கு சென்னை மக்கள் வந்துள்ளனர். அவர் விரைவில் பழைய ஃபார்முக்கு வர வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

மழை நின்னா போதும்டா சாமி என்று இருக்கும் சென்னை மக்கள் அவ்வப்போதும் பெய்யும் மழையால் மேலும் கதி கலங்கி போயுள்ளனர். இதற்கிடையே சென்னை வெள்ளத்தில் சிக்கி ரமணன் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai people have decided to stop making fun of meteorological centre director Ramanan after the city is flooded.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X