இந்த தேர்தலில் ரஜினிகாந்தின் தாக்கம் இருக்காது: இளங்கோவன்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் தாக்கம் இருக்காது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் வரும்போது எல்லாம் அரசியல் கட்சிகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆதரவை எதிர்பார்ப்பதும், அவர் மவுனம் சாதிப்பதும் வழக்கமாகிவிட்டது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரஜினிகாந்த் சப்தமில்லாமல் தனது பட வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ரஜினிக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்ததை பாராட்டும் வகையில் அவருக்கு பிரமாண்டாமாக மாநாடு போன்று பாராட்டு விழா நடத்த ரசிகர்கள் முடிவு செய்து அவரை சந்திக்க சென்றனர்.

தேர்தல் நேரம்
தேர்தல் நேரத்தில் ரசிகர்கள் தன்னை சந்தித்தால் நிச்சயம் அரசியல் பற்றி பேசுவார்கள் என நினைத்து அவர் உடல்நிலையை காரணம் காட்டி அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.

மாநாடு போன்றா?
அரசியல் கட்சிகள் தேர்தலையொட்டி மாநாடு நடத்தி வரும் நிலையில் தனது ரசிகர்கள் பாராட்டு விழாவை மாநாடு போன்று நடத்தினால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என நினைத்து ரஜினி விழாவுக்கு அனுமதி அளிக்கவில்லை.

இளங்கோவன்
இந்த சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்தின் தாக்கம் எதுவும் இருக்காது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

முத்துகுமாரசாமி வழக்கு
வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமியின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றாவிட்டால் நீதிமன்றத்திற்கும் செல்வோம். முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக போலீசார் அனைத்து ஆதாரங்களையும் சமர்பிக்கவில்லை என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications