Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆ.. பாலத்திற்கு மேலே இறக்கையா? ஓடி வந்த மக்கள்.. திருப்பத்தூர் பாலத்தை பார்த்தால் ஒரே ஆச்சர்யம்.. அட

புதிய காற்றாலை மில்லிற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தினமும் தமிழ்நாட்டை நோக்கி காற்றாலை இறக்கைகள் கொண்டு வரப்படுகின்றன.

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் இன்று திடீரென பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசல் ஏற்பட்ட காரணமும், அங்கே மக்கள் கூடிய கூட்டமும் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் இந்தியாவிற்கே தமிழ்நாடு தற்போது மிகப்பெரிய முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரத்தில் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து உள்ளது.

இந்தியாவிலேயே முதல்முறையாக மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார். தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் இந்த மின் நிலையத்தை தொடங்கி வைத்தார்.

காற்றாலை

காற்றாலை

காற்றாலை மின்சாரத்திலும் டென்மார்க்கிற்கு இணையாக தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் காற்றாலைகள் அதிகம் உள்ளன. தேனி, தென் மாவட்டங்களில் நெல்லை, கன்னியாகுமரி அருகே பல்வேறு இடங்களில் வழி நெடுக காற்றாலைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த காற்றாலைகள்தான் தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் பெரிய அளவில் மின்சார தேவையை பூர்த்தி செய்யவும் உள்ளன. இன்னொரு பக்கம் கடலில் காற்றாலை மூலம் மின்னுற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து வருகிறது.

கடலில் காற்றாலை

கடலில் காற்றாலை

இதற்காக யு.கே நாட்டை சேர்ந்த அதிகாரிகள் விரைவில் தமிழ்நாடு வர உள்ளனர். இவர்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி கடல் பகுதிகளை பார்வையிட உள்ளனர். அங்கே கடலில் காற்றாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உள்ளனர். தமிழ்நாடு தனி நாடாக வைத்து பார்த்தால் உலகிலேயே இரண்டாவது பெரிய காற்றாலை மின்சார உற்பத்தி நாடாக இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டின் இந்த முயற்சி காரணமாக உலகிலேயே காற்றாலை உற்பத்தியில் நம்பர் 1 இடத்தை பிடிக்க கூட வாய்ப்புகள் உள்ளன.

காற்றாலை

காற்றாலை

புதிய காற்றாலை மில்லிற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தினமும் தமிழ்நாட்டை நோக்கி காற்றாலை இறக்கைகள் கொண்டு வரப்படுகின்றன. ஓசூர் வழியாக இந்த காற்றாலைகள் தென் மாவட்டங்களை நோக்கி கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. தமிழ்நாட்டில் பெங்களூர் - திருச்சி நெடுஞ்சாலை, திருச்சி - நெல்லை நெடுஞ்சாலையில் செல்லும் பலர் சாலை ஓரத்தில் காற்றாலை இறக்கைகள் இருப்பதை பார்த்து இருப்பார்கள். இவை எல்லாம் தென் மாவட்டங்களை நோக்கி எடுத்து செல்லப்படும் காற்றாலைகள்தான்.

 போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

இந்த நிலையில்தான் திருப்பத்தூர் அருகே வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் இன்று திடீரென பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காற்றாலை இறக்கையை கொண்டு சென்ற கனரக வாகனம் ஒன்று வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலம் மீது கனரக வாகனம் பழுதாகி நின்றது. பாலத்தின் நடுவே அப்படியே இறக்கையோடு இந்த வாகனம் பழுதாகி நின்றது. தற்போது இதன் புகைப்படங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகின்றன.

மக்கள் கூட்டம்

மக்கள் கூட்டம்

இதை பார்க்க இன்று மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த பகுதிக்கு வந்தனர். பாலத்தின் நடுவே இறக்கை மாட்டிகொண்டது போல அங்கு அந்த கனரக வாகனம் நின்றதால் அதை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். என்ன இது பாலத்தின் மீது இப்படி காற்றாலை இறக்கை நிற்கிறதே என்று அதை பார்க்க மக்கள் பலர் கூட்டமாக கூடினார்கள். இந்த வாகனத்தை சரி செய்ய நீண்ட நேரம் ஆனதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாலத்தின் பாதியை இதன் இறக்கை அடைத்துக்கொண்டதால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+