ஆம்புலன்ஸில் வீல் சேரில் வந்து +2 தேர்வு எழுதிய மாணவரை ஞாபகம் இருக்கா? 565 மார்க் எடுத்து அசத்தல்!
ராமநாதபுரம்: பிளஸ் 2 பொதுத் தேர்வு சமயத்தில் விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஆம்புலன்ஸில் வீல் சேரில் வந்து தேர்வுகளை எழுதிய மாணவர், 600க்கு 565 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆம்புலன்ஸில் வந்து பொதுத்தேர்வு எழுதினார் மாணவர் சமயரித்திக். இந்நிலையில், இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அவர் அதிக மதிப்பெண்களைப் பெற்று அசத்தி உள்ளார்.

ஆம்புலன்ஸில் சென்று தேர்வு
ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை அருகே உள்ள மோர் பண்ணை மீனவ கிராம பகுதியைச் சேர்ந்த மாணவர் சமயரித்திக்கிற்கு பொதுத்தேர்வுக்கு சில நாட்கள் முன்னதாக ஒரு விபத்தில் காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. நன்றாகப் படிக்கும் மாணவரான சமயரித்திக், தேர்வு நேரத்தில் இப்படி ஆனதால் கலக்கமடைந்தார். ஆனாலும், நன்றாகப் படித்து தேர்வை எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
பெற்றோர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலமாக பள்ளிக்குச் சென்று தேர்வுகளை எழுதினார் மாணவர் சமய ரித்திக். வீல் சேரில் தேர்வு அறைக்குச் சென்று அனைத்து தேர்வுகளையும் எழுதினார் சமய ரித்திக். இந்நிலையில், இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் சமயரித்திக்.
600க்கு 565 மதிப்பெண்
இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர் சமயரித்திக், 600க்கு 565 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தற்போது சமயரித்திக், உயர் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
மாணவர் சமயரித்திக் பேட்டி
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள மாணவர் சமயரித்திக், "நான் நடக்க முடியாத நிலையில் என்னை தேர்வு எழுத வீல் சேரில் அழைத்துச் சென்று உதவிய பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. பொதுத் தேர்வின் போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தேன். மருத்துவமனையில் இருந்தபடியே தேர்வுகளுக்கு படித்து தேர்வுகளை எழுதினேன்.
மருத்துவத் துறை சார்ந்து படிக்க விரும்புகிறேன். நீட் தேர்வு எழுத திட்டமிட்டு தயாராகி வந்தேன். ஆனால், எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருவதால் தற்போது எழுத முடியவில்லை." எனத் தெரிவித்துள்ளார் சமயரித்திக்.
பிளஸ் 2 ரிசல்ட்
பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதிய நிலையில் மொத்த தேர்ச்சி விகிதம் 95.03% ஆகும். இதில் மாணவர்கள் 93.16%, மாணவியர்கள் 96.70% தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 3.54% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல் அரசு பள்ளிகளில் 91.94% தேர்ச்சியும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 95.71% தேர்ச்சியும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 98.88% தேர்ச்சியும் ஆகும். +2 பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக பார்க்கையில் அரியலூர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. அந்த மாவட்டம் 98.82 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் 97.98 சதவீதம், திருப்பூர் மாவட்டம் 97.53 சதவீதம், கோயம்புத்தூர் மாவட்டம் 97.48 சதவீதம், கன்னியாகுமர் மாவட்டம் 97.01 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளது.
+2 பொதுத்தேர்வில் 26,887 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100க்கு 100 திப்பெண் எடுத்துள்ளனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் 2,853. தமிழில் 135 மாணவர்களும் இயற்பியல் பாடத்தில் 1,125, வேதியியல் பாடத்தில் 3,181, உயிரியல் பாடத்தில் 827, கணிதம் பாடத்தில் 3,022, தாவரவியல் பாடத்தில் 269, விலங்கியல் பாடத்தில் 36, கணினி அறிவியல் பாடத்தில் 9,536, வணிகவியல் பாடத்தில் 1,624, கணக்கு பதிவியல் பாடத்தில் 1,240, பொருளியல் பாடத்தில் 556, கணினிப் பயன்பாட்டில் 4,208, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 273 மாணவர்களும் சென்டம் எடுத்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications