ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வெற்றி வேட்பாளர் வளர்மதியா, ஜெ.வா? – பாவம் ஜெயா டிவியே குழம்பிடுச்சு!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலையில் இருந்து தொடங்கி நடைபெற்று அக்கட்சியின் வேட்பாளரான வளர்மதி வெற்றியும் பெற்றுள்ள நிலையில் இடைத்தேர்தல் வெற்றி வேட்பாளர் வளர்மதியா, ஜெயலலிதா என்று சந்தேகம் வரும் அளவுக்கு பார்ப்பவர்களை குழப்பி வருகின்றது ஜெயா டிவி.
காரணம் ஒரு முறை கூட வேட்பாளரின் முகத்தை அது காட்டவில்லை. மாறாக முன்னாள் எம்எல்ஏ ஜெயலலிதா படத்தையே காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
காலையிலிருந்து வாக்கு முன்னணி நிலவரங்களை வெளியிட்டு வருகின்ற ஜெயா டிவி, வாக்கு நிலவரம் போடும் போது மருந்துக்கு கூட வளர்மதியின் புகைப்படத்தை காட்டவில்லை. ஒரு சிறிய ஸ்டாம்பு சைஸ் போட்டோ கூட எண்ணிக்கை குறித்த செய்திகளில் வெளியிடப்படவில்லை. வளர்மதியின் பெயரைக் கூட உச்சரிக்கவி்ல்லை யாரும்.

இதுகூட பரவாயில்லை காலையில் பேசிக் கொண்டிருக்கும்போதே ஓரிடத்தில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்த நேரடித் தொகுப்பாளர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா இத்தனை வாக்குகள் முன்னணியில் உள்ளார்?! என்று உணர்ச்சி பெருக்கில் கூறி, வேட்பாளர் வளர்மதி என்பதையே மறந்து விட்டார்.
இரட்டை இலையும், பெரிய அளவில் "அம்மா" புகைப்படமும் மட்டுமே வாக்கு நிலவரம் குறித்த பகுதியில் இடம் பெற்று வந்தது. அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என்று கூறினாலும் பரவாயில்லை ஆள்மாற்றி ஆள் ஜெயலலிதாவிற்கு கிடைத்த வெற்றி என்றே கூறிக் கொண்டிருந்தனர் மாற்றி மாற்றி.
பாவம் ஜெயலலிதா தொகுதியில் தைரியமாக தேர்தலில் நின்று அவரைவிடவும் அதிக வாக்குகள் பெற்று ஜெயித்துள்ள காரணத்திற்காகவாவது கொஞ்சம் பெரிய மனசுடன் வளர்மதி போட்டோவை சின்ன அளவிலாவது போடுங்க பாஸ்!












Click it and Unblock the Notifications