மருத்துவமனையில் ஜெயலலிதா உடன் இருந்தவர்கள் யார்? கேட்கிறார் தமிழிசை
மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றபோது அவருடன் இருந்தவர்கள் யார் என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றபோது அவருடன் இருந்தவர்கள் யார் என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மரண விவகாரத்தில் அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் அளித்து வரும் முரணான தகவல்கள் அவரது சந்தேகத்தில் ஏதோ மர்மம் இருப்பதை உறுதிப்படுத்துவது போல் உள்ளது. இதனால் ஜெயலலிதா மரண விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க தமிழக அரசு ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்த மக்களின் சந்தேகங்களை விசாரணை ஆணையம் மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவருடன் இருந்தவர்கள் யார் என்று கேள்வி எழுப்பிய தமிழிசை அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து தெளிவான நிலை ஏற்படும் வரை அரசியல் செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications