திடுதிப்பென இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றி கமல் பேசுவது இதற்குத்தானா?
திடீரென இந்தி திணிப்பு எதிர்ப்பின் போதே அரசியலுக்கு வந்துவிட்டதாக கமல் பேசியிருப்பது புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
சென்னை: கமல்ஹாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தி திணிப்பை எதிர்த்தபோதே தாம் அரசியலுக்கு வந்துவிட்டதாக சுட்டிக்காட்டியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரை நூற்றாண்டுகாலமாக திராவிட அரசியல்தான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வருகிறது. திராவிட அரசியலின் ஆணிவேரான சமூக நீதி, இந்தி திணிப்பு எதிர்ப்பு, ஈழத் தமிழர் பிரச்சனையை பற்றி பேசாத எந்த ஒரு கட்சியும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது.
ஆனால் பாஜகவோ, கழகங்கள் இல்லாத தமிழகம் என நேர் எதிர் முழக்கத்தை முன்வைக்கிறது. இத்தகைய முழக்கங்கள்தான் பாஜகவை தமிழ் மண்ணில் இருந்து அன்னியப்படுத்தி வருகிறது.

இந்தி திணிப்பு
இந்நிலையில் அரசியலுக்கு தாம் ஏற்கனவே வந்துவிட்டதாக இன்று நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன், இந்தி திணிப்பு எதிர்ப்பின் போதே தாம் அரசியலுக்கு வந்துவிட்டேன் என அடிக்கோடிட்டு கமல் அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

திராவிட அடையாளம்
ஏற்கனவே தம்மை பகுத்தறிவாளன், கருப்புச் சட்டைக்காரன் என திராவிட அடையாளத்துடன் தம்மை இணைத்துக் கொள்ள முயற்சிப்பவர் கமல்ஹாசன். இப்போது இந்தி திணிப்பு எதிர்ப்பின் மூலம் அரசியலுக்கு வந்துவிட்டேன் என கூறியுள்ளார் கமல்.

விமர்சனங்களில் சிக்கிய கமல்
இதுவும் திராவிட அரசியலோடு தம்மை அடையாளப்படுத்தும் கமல்ஹாசனின் ஒரு முயற்சியாகத்தான் இதை பார்க்க முடியும். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரி பிஹேவியர் என காய்த்ரி ரகுராம் வெளிப்படுத்திய வக்கிரத்தைக் கண்டிக்காத கமல்ஹாசனை அப்போதே திராவிட அரசியல் பேசுவோர் தோலுரித்து தொங்கவிட்டனர். அப்போதே அவரது முகம் அம்பலமானது.

இழந்த அடையாளம்
இப்போது இந்தி திணிப்பு எதிர்ப்பு மூலம் இழந்த அடையாளத்தை திரும்பப் பெற கமல்ஹாசன் முயற்சிக்கிறார் என்பதுதான் வெளிப்படையாக தெரிகிறது. ஈழத் தமிழர் பிரச்சனை, சமூக நீதி ஆகியவை அடுத்தடுத்த அறிக்கைகளில் தேடிப் பிடித்து கமல்ஹாசன் பயன்படுத்துவார் என்பதில் சந்தேகமே இல்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications