ஜிஎஸ்டி.. திரையுலகிற்கே குரல் கொடுக்காத ரஜினியா அரசியலில் குரல் கொடுப்பார்? டி.ராஜேந்தர் பொளேர்
சென்னை: திரையுலகம் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து குரல் கொடுக்காத ரஜினியா, அரசியலில் மக்களுக்காக குரல் கொடுப்பார் என கேட்டுள்ளார் லட்சிய திமுக கட்சி தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர்.
நாடு முழுக்க திரையரங்கங்கள் மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தமிழக அரசு கேளிக்கை வரி என்ற வகையில் 30 சதவீதம் வரி விதித்துள்ளது.
ஜிஎஸ்டியை மீறி தமிழக அரசு வரி வசூல் செய்ய முடியாது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தியேட்டர்கள் மீது கேளிக்கை வரி சுமத்தும் வகையில் சட்டத் திருத்தம் செய்துள்ளது தமிழக அரசு.

சினிமா மீது வரி
இந்த செயல்பாடுகளால் தமிழக திரையரங்குகள் மீது மொத்தம் 58 சதவீத வரி விழுகிறது. இதனால் தியேட்டர்களையும், சினிமாவையும் நம்பியுள்ள பல ஆயிரம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

கமல் முதலில் எதிர்ப்பு
ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து சில வாரங்கள் முன்பே நடிகர் கமல்ஹாசன் ஆதங்கம் வெளிப்படுத்தினார். தமிழ் திரையுலகில் இருந்து வெளியான முதல் வாய்ஸ் அவருடையது. வரி விகிதம் இப்படி இருந்தால் நான் திரையுலகை விட்டே வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார். அனைத்து மாநில மொழி படங்களுக்கும் ஒரே மாதிரி வரி என்பது நடைமுறைக்குக்கு மாறானது என்றார் கமல்.

முதல்வருடன் சந்திப்பு
இந்த நிலையில், தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் வேலுமணி ஆகியோரை சந்தித்து வரி குறைக்க கோரிக்கை மனு வழங்கினார். நிருபர்களிடம் பேசிய ராமநாதன் கூறுகையில், திரையரங்குகள் மீது மாநில அரசு கேளிக்கை வரியாக 30 சதவீதம் நிர்ணயித்துள்ளது. வாட் வரி 28 சதவீதம். எனவே 58 சதவீத வரியை செலுத்துவது மிகவும் கஷ்டம் என முதல்வரிடம் தெரிவித்தோம் என தெரிவித்தார்.

குரல் கொடுப்பாரா?
இதுகுறித்து டி.ராஜேந்தர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி குறித்து ரஜினி மவுனம் காக்கிறார். தமிழ் திரையுலகத்தை ஜிஎஸ்டி வரி பாதிக்கும். தான் சார்ந்த திரையுலகிற்கே குரல் கொடுக்காத ரஜினியா அரசியலுக்கு வந்து மக்களுக்காக குரல் கொடுப்பார்.

மோடிக்கு டாக்டர் பட்டம்
மக்களைச் சிரமப்படுத்துவதில் ஜி.எஸ்.டி.யில் பி.ஹெச்.டி. பெற்றிருக்கிறார் மோடி. மக்களுக்கு சேவை செய்ய அரசியல்வாதிகள் இருக்கிறார்களே, பிறகு திரையுலகம் மீது எதற்காக சேவை வரி விதிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார் டி.ராஜேந்தர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications