கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன்: அழகிரி பேட்டியால் பரபரப்பு
சென்னை: கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.க. அழகிரியின் பேரனின் முதலாவது பிறந்த நாள் சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற அழகிரி, கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம், கருணாநிதி உடல்நிலை நன்றாக இருக்கிறது என்றார். பின்னர் சென்னை விமான நிலையத்திலும் செய்தியாளர்களை சந்தித்தார் அழகிரி.
இச்சந்திப்பின் போது நீங்கள் மீண்டும் திமுகவில் இணைவீர்களா? என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி முடிப்பதற்குள், கருணாநிதி அழைத்தால் திமுகவில் சேருவேன் என வேகமாக பதிலளித்தார் அழகிரி. அவரது இந்த பேட்டியால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் அழகிரி. அதன் பின் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தாலும் ஸ்டாலினை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications