ஸ்டாலின் தான் தமிழகத்தின் முதல்வராவார்.. நிதீஷ்குமார் ஆருடம்!
சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராகி மதுவிலக்கை கொண்டு வருவார் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பீகார் முதல்வர் நிதீஷ்குமார், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். வலுவான கட்சி என்பதால் அவர் அவ்வாறு கூறினார்.
கருணாநிதி கொண்டுவந்த திட்டங்களை மு.க.ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றுவார். பூகாரில் கூட்டணி ஆட்சி மூலம் மதுவிலக்கை கொண்டு வந்துள்ளோம். மதுவிலக்கை அம்படுத்தியுள்ளதால் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அரசியல் அனுபவம் கொண்டவர். எனவே அவர் இந்த மாநில முதல்வராக வருவார் என எனது மனதில் எழுகிறது. நிச்சயம் அந்த எண்ணம் நிறைவேறும். மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வரானால் நிச்சயம் மதுவிலக்கை அமல்படுத்துவார் என நான் நம்புகிறேன். என்று பேசினார்.