அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பற்றி பிரேமலதா கூறியது நடந்து விடுமோ?
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: ஆத்தூர் தொகுதியில் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநதான் பின்தங்கியுள்ளார். திமுக வேட்பாளர் ஐ. பெரியசாமி முன்னிலையில் உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பின்தங்கியுள்ளார்.

திமுக வேட்பாளரான ஐ. பெரியசாமி தான் முன்னிலையில் உள்ளார். மின்துறையில் கோடிக் கணக்கில் மோசடி நடந்துள்ளது. நத்தஸ் விஸ்வநாதன் டெபாசிட் கூட பெற மாட்டார் என்று தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தின்போது தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் 68 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications