இயற்கை மருத்துவம் மீதான மக்களின் ஆர்வமே எமனாக மாறுகிறதா? போலி சித்த வைத்தியர்களை கண்டறிவது எப்படி?
போலி சித்த வைத்தியர் கொடுத்த மருந்தால் நெல்லை மாவட்டத்தில் 3 பேர் மரணமடைந்துள்ள நிலையில், போலி மருத்துவர்களை கண்டறியும் பொறுப்பை அரசு கையிலெடுக்க வேண்டிய காலம் வந்துள்ளது.
நெல்லை: ஆங்கில மருத்துவம் மீதான எரிச்சலும், இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவம் குறித்த அரைகுறை புரிதலும் போலி சித்த வைத்தியர்களை தமிழகத்தில் வளரச் செய்துவருகிறது. இதன் எதிர் விளைவுதான், நெல்லை மாவட்டத்தில் நடந்த 4 பேரின் கொடுமையான மரணங்கள்.
இப்போதெல்லாம் இயற்கை மருத்துவம், இயற்கை விவசாயம்தான் உயர் நடுத்தர வகுப்பினரின் பேசு பொருளாக மாறியுள்ளது. இவர்களை குறி வைத்துதான் ஆர்கானிக் பொருட்கள் விற்பனையகங்கள் நாடெங்கும் கிளை பரப்பி வருகின்றன.

"விலை கொஞ்சம் அதிகம்தான்.. ஆனா, பூச்சிக்கொல்லி மருந்து, ரசாயன உரம் போடாத, உடம்புக்கு தீமையை தராத காய் கறி" என்று இந்த காய்கறிகளுக்கு சர்டிபிகேட் கொடுக்கப்படுகிறது. ஒரு வகையில், இந்த விழிப்புணர்வு நல்லதுதான் என்றபோதிலும், கண்மூடித்தனமான நம்பிக்கைகள் கடைசியில் உயிருக்கே வேட்டு வைத்துவிடும் என்பதற்கு தென்காசி சித்த வைத்தியர் கதை ஒரு உதாரணம்.
முத்துப்பாண்டி என்ற 'சோ கால்டு' சித்த வைத்தியர் கலக்கி கொடுத்த கசாயத்தை குடித்துவிட்டுதான், இருளாண்டி, பாலசுப்பிரமணியன் , சவுந்தரபாண்டியன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மயக்கம், வாந்தி ஏற்பட்ட அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தபோது சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.
எனது மருந்தால் எந்த விளைவும் ஏற்படாது என காண்பிப்பதற்காக அதையே குடித்து காட்டிய முத்துப்பாண்டியும் மரணமடைந்துள்ளார். ஆங்கில மருத்துவர்களுக்கு மெடிக்கல் கவுன்சில் கட்டுப்பாடு உள்ளதை போல சித்தா, ஆயுர்வேதா மருத்துவர்களை இனம் காண முடியாமல் மக்கள் திணறுகிறார்கள். மறுபக்கம், இயற்கை வைத்தியத்தின் மீதான ஆர்வம் அவர்களை உந்துகிறது. இவ்விரு சிக்கல்களுக்கும் நடுவேதான், இதுபோன்ற போலி வைத்தியர்களிடம் சிக்கி வாழ்க்கையை இழக்கிறார்கள்.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற துறைகளில் வைத்தியம் பார்ப்போரின் அனுபவம், படிப்பு போன்றவற்றை தீர விசாரித்து, உண்மையான வைத்தியர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்க வேண்டும், அதை நோயாளிகள் பார்க்கும்படி வெளிப்படையாக ஒட்டி வைக்க வேண்டும், போலி வைத்தியர்களை கைது செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications