Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணி.. 11 இடத்தில் சரமாரியாக கத்தியால் குத்திய கொழுந்தனார்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டத்தில் தனது ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை கத்தியால் 11 இடங்களில் குத்திப் படுகாயப்படுத்தியுள்ளார் இளைஞர் ஒருவர். அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

களரம்பட்டியைச் சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மனைவி பெயர் செல்லம்மாள். கணவர், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பூங்காவனத்தின் தம்பி முருகன், தனது அண்ணிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார். தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

Woman hacked near Salem

இதனால் சேலத்தை விட்டு இடம் பெயர்ந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்குப் போய் விட்டால் செல்லம்மாள். ஆனால் முருகன் விடவில்லை. அங்கும் வந்து தன்னுடன் வந்து விடுமாறு செல்லம்மாளை வற்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கத்தியை எடுத்து செல்லம்மாளை சரமாரியாக குத்தினார் முருகன்.

இதில் செல்லம்மாளின் உடலில் 11 இடங்களில் வெட்டு விழுந்தது. அவர் வலியால் துடித்தார். ரத்தம் கொட்டிய நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் முருகனைக் கைது செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+