கோவை: மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகள் கைது!
கோவை: கோவையில் கள்ளத் தொடர்பை கண்டித்த மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை, ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது தாயார் ரங்கநாயகி. பாலசுப்பிரமணியம் தனது தாயாரின் வீட்டின் அருகிலேயே வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை ரங்கநாயகியின் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ரங்கநாயகியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
அருகில் இருந்தவர்கள் கொலை சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிங்காநல்லூர் காவல் துறையினர் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தனது கள்ளத் தொடர்பு மாமியார் ரங்கநாயகிக்கு தெரிந்ததால், மருமகள் பத்மபிரியா கூலிப்படை வைத்து மாமியாரை கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மருமகளை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கூலிப்படையினர் குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications