காரைக்கால் பீச்சில் பட்டப்பகலில் பெண் பாலியல் பலாத்காரம்
காரைக்கால்: காரைக்கால் கடற்கரையில் பட்டப்பகலில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் கல்லூரி ஒன்றில் வேலை பார்க்கிற இளம் பெண் ஒருவர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனுடன்(காதலன்) கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அப்போது திடீரென அங்கு பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அப்பெண்ணை தாங்கள் வந்த பைக்கில் ஏற்றி கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர். உடனே அந்த பெண்ணை அவரது காதலன் தனது பைக்கில் ஏற்றி சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவர்களை பைபாஸ் ரோடு வரை துரத்திக் கொண்டு போய் அவர்கள் போன பைக்கை மடக்கி காதலனை தாக்கி, அந்த பெண்ணை தங்களின் பைக்கில் வலுக்கட்டாயமாக அந்த 3 பேர் ஏற்றிச் சென்றுள்னனர்.
கடற்கரையில் உள்ள பாலத்திற்கு அடியில் உள்ள பெரிய ராட்சத்திர தண்ணீர் குழாய்க்குள் இழுத்துச் சென்று மூவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனையடுத்து இது குறித்து காரைக்கால் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் மூன்று குற்றவாளிகளில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான்.
சிக்கிய இரு குற்றவாளிகள், பாதிக்கப்பட்ட பெண், அவரது காதலனை நகர காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்னும், அவரது காதலனும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும், குற்றவாளிகள் மூவரும் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரைக்காலில் நன்னிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்ததும், இச்சம்பவம் நடந்த ஒரே வாரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிரவி என்ற இடத்தில் குல்பி விற்பவரின் இளம் மனைவியை சிலர் காரில் கடத்த முயன்ற சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications