மீண்டும் அதிகரிக்கும் குழந்தை திருட்டு-நாகப்பட்டினத்தில் பரபரப்பு
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் ஒரு பெண், பச்சிளம் குழந்தையை திருடிச் சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த திருகண்ணபுரம் பெரிய நாட்டார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் திருப்பூரில் தனியார் கம்பெனியில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவர் கோயமுத்தூரைச் சேர்ந்த கிருத்திகா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கிருத்திகா மீண்டும் கர்ப்பமடைந்து பிரசவத்திற்காக திருகண்ணபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த வாரம் கிருத்திகா 2 வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இதையடுத்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக கிருத்திகா நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கிருத்திகாவுக்கு உதவியாக கணவர் பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் தங்கி இருந்தார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் வெளியே சென்ற நேரத்தில் தனியாக இருந்த கிருத்திகாவிடம் அங்கு வந்த 30 வயது மதிக்கதக்க கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று கூறி குழந்தையை தூக்கி சென்றார்.
நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த கிருத்திகா தனது கணவருக்கும், அருகில் இருந்தவர்களிடமும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் மருத்துவமனை முழுவதும் தேடியும், அந்த பெண்ணும், குழந்தையும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் மாவட்ட போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராவை சோதனை செய்தனர். இதில் குழந்தையை திருடிச்சென்ற பெண்ணின் உருவம் பதிவாகி இருந்தது.
கேமிராவில் பதிவாகி இருந்த உருவத்தை வைத்து குழந்தையை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருத்திகா முதலில் திருக்கண்ணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் அங்குள்ள ஊழியர்கள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அங்குள்ள ஊழியர்களை திட்டச்சேரி போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications