மகளிர் தினம் - அவ்வையார் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவ்வையார் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவ்வையார் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, நிலோபர் கபில், ஸ்ரீரங்கம் வளர்மதி ஆகியோர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவ்வையார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவ்வையாரின் அமுத மொழிகள் இன்றைக்கும் பலருக்கு எடுத்துக்காட்டாக விளங்கிறது. இதனை முன்னிட்டே ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று அவ்வையாருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

அவ்வையார் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, நிலோபர் கபில், ஸ்ரீரங்கம் வளர்மதி ஆகியோர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா, மகளிருக்காக பல திட்டங்களை கொடுத்தவர் ஜெயலலிதா என்றார்.
தாலிக்கு தங்கம், கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்டம், பேருகால உதவிகள் என பல திட்டங்களை ஜெயலலிதா அறிவித்துள்ளார் என்றும் கூறினார். மகளிர் நலனுக்காக 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் சரோஜா கேட்டுக்கொண்டார்.
முன்னதாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மீனவர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் ஜெயலலிதா என்றார். கச்சதீவை மீட்க வாக்கு தொடுத்தவர் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications