வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் இளங்கோவன் மீது நடவடிக்கை.. பெண்கள் அமைப்பு புகார்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறையில் புகார் தரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுதேசி பெண்கள் அமைப்பு என்ற அமைப்பின் மாநிலத் தலைவர் எம். கலைச்செல்வி சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று ஒரு புகார் கொடுத்தார்.
அப்புகாரில், பெண்கள் அரசியலுக்கு வருவதே அரிது. இதில் இலங்கோவன் போன்றவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் இது போன்ற செயல்கள் அரசியல் நாகரிகமற்ற செயல் மட்டுமல்ல பெண்களின் மீதான வன்கொடுமையும் கூட.

ஒரு பெண்ணை அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், பாரத பிரதமரையும் மிகவும் தர குறைவாக பேசியது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆகையால் .இளங்கோவன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications