புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு.. மரங்களை வெட்டி சாலையில் போட்டு பெண்கள் மறியல்.. மேலூரில் பரபரப்பு

புதிய டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதுரை மேலூர் அருகில் சாலை மறியலில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதே போன்று இன்று மதுரை மேலூர் அருகில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுரை மேலூர் அருகில் புதிய டாஸ்மாக் கடை திறக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் அனைத்தும் முடிந்தன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Women stage road rokho against TASMAC at Melur

இந்நிலையில், மதுக்கடைக்கு எதிராக நெண்டிக்கோயில்பட்டி சாலையில், மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மரங்களை வெட்டி சாலையின் குறுக்கில் போட்டு மறியலில் ஈடுபட்டுள்ளதால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சாலையில் அமர்ந்து மதுவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், புதிய டாஸ்மாக் கடையை இங்கே திறக்கக் கூடாது. இதனால் பெண்களும், பள்ளி செல்லும் மாணவ மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று கூறினர். இதனால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+