எங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்த இளைஞர்களை இப்படியா துரத்துவீர்கள்.. பெண்கள் ஆவேசம்

எங்களுக்குப் பாதுகாப்பாக இருந்த இளைஞர்களையும், மாணவர்களையும் இப்படியா துரத்துவீர்கள் என்று பெண்கள் ஆவேசமாக கேட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் போராடி வந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த காலை உணவையும், தண்ணீர் பாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இதற்கிடையே, மாணவர்களை போலீஸார் அப்புறப்படுத்திய செயலுக்கு பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை திடீரென பலப்பிரயோகத்தில் குதித்தது போலீஸ். அமைதியான முறையில் போராடி வந்த மாணவர்களையும், இளைஞர்களையும், பெண்களையும் குண்டுக்கட்டாக தூக்கி கலைத்ததது போலீ்ஸ். பலரை தரதரவென இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர். பெண்களையும் கூட விடவி்ல்லை போலீஸ்.

Women up in the arms against Police action

இந்த நிலையில் இன்று காலை சாப்பிடுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த உணவையும் கூட போலீஸார் விடவில்லை. அவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அங்கு குப்பைகளே இல்லாமல் அற்புதமாக பார்த்துக் கொண்டனர். ஆனால் தற்போது மெரீனா கடற்கை போர்க்களம் போல காணப்படுகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பெண்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக ஒரு பிரச்சினையும் இல்லை. எங்களுக்கெல்லாம் மாணவர்களும், இளைஞர்களும் பாதுகாப்பாக இருந்தனர். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொண்டனர். அவர்களை இப்படியா அப்புறப்படுத்துவது.

யாருக்காக போலீஸ். மக்களுக்குத்தானே போலீஸ். அவர்களை விரட்டி விட்டு விட்டு யாரைப் பாதுகாக்கப் போகிறது போலீஸ். அமைச்சர்களுக்கு பாதுகாப்பு தரும் போலீஸ் மக்களை இப்படியா துரத்துவது.

நாங்கள் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பிரச்சினைக்காககவும் வந்துள்ளோம் என்று ஆவேசமாக கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+