விஷ்ணு ப்ரியா வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது: ஹைகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
சென்னை: டி.எஸ்.பி. விஷ்ணு ப்ரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணு ப்ரியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தலித் வாலிபர் கோகுல் ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த அவருக்கு உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் பெற்றோர் தெரிவித்தனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவினர் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி விஷ்ணு ப்ரியாவின் தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து அவர் மேல்முறையீடு செய்தார்.
அவரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் குமார் அக்னிஹோத்ரி மற்றும் பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு மற்றும் காவல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் விஷ்ணு ப்ரியாவின் வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து ரவியின் வழக்கறிஞர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கு குறித்த ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட்டனர். மேலும் இறுதி விசாரணை ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவித்து வழக்கை விசாரணையை ஒத்தி வைத்தனர்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications