ப்ரே பண்ணுங்கப்பா.. எல்லோரும் ப்ரே பண்ணுங்க.. கவர்னர் தரும் அறிவுரை!
தியாகி லட்சுமணன் சிலையை ஆளுநர் திறந்து வைத்தார்.
Recommended Video

கோபி: "எல்லோரும் சாமி கும்பிட வேண்டும். அப்படி கும்பிட்டால் குற்றங்கள் குறையும்" என்று தெரிவித்துள்ளார் நமது ஆளுநர் பன்வாரிலால்.
கோபியில் தியாகி லட்சுமணனின் உருவ சிலையை ஆளுநர் திறந்து வைத்தார். தியாகி லட்சுமணனின் புகழ் குறித்து ஆளுநர் பேச தொடங்கும்போது ஆளுநர் 'வணக்கம்' என்று தமிழில் சொல்லிவிட்டு பேசினார். அப்போது, மனித கழிவுகளை மனிதனே அள்ள வேண்டும் என்ற முறையை அகற்ற பாடுபட்டவர் தியாகி லட்சுமணன் என்றார்.

காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட 'அரிசன் சேவா சங்கம்' கோபி என்ற இந்த கிராமத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றும் அதற்கு தியாகி லட்சுமணன் உழைத்து அதை வளர்த்துள்ளார் என்றும் ஆளுநர் புகழாரம் தெரிவித்தார்.
தொடந்து பேசிய ஆளுநர், கடவுள் வழிபாடு குறித்து பேச ஆரம்பித்தார், எல்லாரும் கடவுளை வழிபடுவதை கடைபிடிக்க வேண்டும். அப்படி நாம் கடவுளை வணங்கி வழிபட்டால் குற்றங்களும், வன்முறைகளும் குறையும் என்றார்.
இரவு தூங்குவதற்கு முன் எல்லோரும் சாமி கும்பிட வேண்டும்... இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என எந்த மதத்தினராக இருந்தாலும் கடவுளுக்கு பயப்பட வேண்டும்" என்றும் ஆளுநர் அறிவுரை கூறினார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications