மிக மோசமான உணவு.. தத்தளிக்கும் நெல்லை நர்சிங் விடுதி மாணவிகள்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட மருத்துவ கல்லூரியில் தங்கி படிக்கும் நர்சிங் மாணவிகளுக்கு மோசமான உணவு வழங்கப்படுவதால் அவர்கள் சாப்பாட்டை புறக்கணித்து என்ன செய்வது என தெரியாமல் தத்தளித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்திலேயே அனைத்து வசதிகளும் நிறைந்தது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தான். இங்கு எக்ஸ்ரே, ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என அனைத்து வசதிகளும் இருக்கிறது.

இதனால் பல மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு விடுதியில் தங்கி எம்பிபிஎஸ், நர்சிங், ஆர்த்தோ உள்ளிட்ட பிரிவுகளில் படித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரி வளாகத்திலேயே உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்த விடுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். ஏற்கனவே குடிநீர் பிரச்சனைக்காக மாணவிகள் போராட்டம் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மிக மோசமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஒருவேளை உணவு மட்டுமே அவர்கள் சாப்பிடுகின்றனர் என்று கூறப்படுகிறது.

தற்போது செமஸ்டர் தேர்வு நேரம் என்பதால் போராட முடியாத நிலையில் என்ன செய்வது என தெரியாமல் மாணவிகள் ஒருவேளை உணவுடன் படித்து வருவது பரிதாபமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+