தூத்துக்குடி: மதபோதகர் மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண் தற்கொலை
தூத்துக்குடி : மதபோதகர் மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கருப்பூரைச் சேர்ந்தவர் ஜோசுவா இமானுவேல்ராஜ் 35. கிறிஸ்துவ மத போதகரான இவர் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் மதபிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மத பிரசாரத்திற்கு வரும் இளம்பெண்களிடம் வேலை வாங்கித்தருவதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி பலரையும் ஏமாற்றியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பாப்பான்குளத்தை அடுத்துள்ள கோவிந்தராஜ் மகள் அனுசுயா, தாழையூத்து போலீசில் புகார் செய்தார்.
அனுசுயாவைப் போலவே பாதிக்கப்பட்ட வேறு சில பெண்களும் புகார் செய்திருந்தனர். 2 நாட்கள் விசாரணைக்கு பின் எட்டையபுரம் கருப்பூரை சேர்ந்த ஜோஷ்வா இம்மானுவேலை போலீசார் கைது செய்தனர். பெண்களை ஏமாற்றி 35 சவரன் நகைகளை பறித்ததாகவும் மதபோதகர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலையில் பாப்பான்குளம் அருகே நெல்லை-மதுரை இடையிலான ரயில்வே தண்டவாளத்தில் மாலை 4.30 மணியளவில் கடந்த ரயிலில் விழுந்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.