வீட்டுக்கு வா.. ஜாலியாக இருக்கலாம்.. ம்ஹூம்.. முடியாது.. சரமாரி அடி!
இளம்பெண்ணை காதலன் தாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெய்வேலி: பண்றதே திருட்டுத்தனம்.. இதில் கோபம் வந்து அதை வந்து கொட்டினால், கடைசியில் ஜெயிலுக்குத்தான் போக வேண்டியிருக்கும்.
நெய்வேலியை அடுத்த கொள்ளிருப்பு காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது 19 வயது மகள் சுமித்ரா. அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் பாபு 22, என்பவரை 4 வருடமாக காதலித்து வந்துள்ளார்.

பலமுறை உறவு
இருவரும் உடல்ரீதியாக நெருக்கமடைந்து பலமுறை உறவு கொண்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களுக்கு இருவரும் சென்று ஜாலியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

வீட்டில் யாரும் இல்லை
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ் பாபு குடும்பத்தில் இருந்தவர்கள், உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டார்கள். இதனால் சுரேஷ்பாபு, சுமித்ராவிடம் சென்று, "எங்களது வீட்டில் யாரும் இல்லை.. நீ என் வீட்டுக்குவா.. நாம் ஜாலியாக இருக்கலாம்" என கூப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ் பாபு குடும்பத்தில் இருந்தவர்கள், உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டார்கள். இதனால் சுரேஷ்பாபு, சுமித்ராவிடம் சென்று, "எங்களது வீட்டில் யாரும் இல்லை.. நீ என் வீட்டுக்குவா.. நாம் ஜாலியாக இருக்கலாம்" என கூப்பிட்டுள்ளார்.

மறுத்த சுமித்ரா
ஆனால் இதற்கு சுமித்ரா மறுத்துள்ளார். பலமுறை சுரேஷ்பாபு வற்புறுத்தி கூப்பிட்டும் சுமித்ரா முடியவே முடியாது என்று கூறியுள்ளார். இதனால் சுரேஷ்பாபுக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது. அதனால் நேற்று நேராக சுமித்ரா வீட்டுக்கு போனார்.

சுரேஷ்பாபு கைது
அங்கே வீட்டில் தனியாக இருந்த சுமித்ராவை சரமாரியாக தாக்க தொடங்கினார். இதில் நிலைகுலைந்து விழுந்த சுமித்ராவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக நெய்வேலி அனைத்து மகளிர் போலீசில் சுமித்ரா புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சுரேஷ்பாபுவை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications