தேனி: மரத்தில் சடலமாக தொங்கிய இளைஞர் - கொலையா? தற்கொலையா?- போலீஸ் விசாரணை
தேனி அருகே இளைஞர் ஒருவரின் உடல் மரத்தில் தூக்கு போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனிமாவட்டம் போடி கரட்டுப்பட்டி அருகே மரத்தில் தொங்கியவாறு இருந்த இளைஞரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தொங்க விடப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரட்டுப்பட்டியில் சாலை வழியாக சென்ற பொதுமக்கள், 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மரத்தில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போடி தாலுகா காவல்துறையினர் இளைஞரது உடலை கைப்பற்றி, இளைஞர் தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்துகொண்டாரா, அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications