வா தண்ணி அடிக்க செல்லலாம்னு அழைத்த நண்பர்கள்.. ரவுண்ட் கட்டிய மர்ம கும்பல்.. இளைஞர் வெட்டி கொலை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் ரவி. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் வீரா (21). இவர் சுமைத் தூக்கும் தொழிலாளி. வீராவை மது அருந்துவதற்காக அவரது நண்பர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
வண்டலூர் கிளாம்பாக்கம் பகுதியில் போன் பேசிக் கொண்டு இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் வீராவை சுற்றி வளைத்துள்ளனர். தப்ப முயற்சித்த வீராவை விடாமல் கை,கால் தலை போன்ற பகுதியில் சரமாரியாக மாறி மாறி வெட்டினர்.

அரசு மருத்துவமனை
ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்ததை கண்ட அப்பகுதி வழியாக வந்தவர்கள் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலித்த பெண்ணின் உறவினர்கள்
பின்னர் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததில் வீரா அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வீரா காதலித்த பெண் வீட்டார் கொலை செய்தனரா அல்லது வீரா காதலித்த பெண்ணை வேறு ஒரு இளைஞர் காதலித்து அதனால் அவர் சம்மந்தப்பட்ட கும்பல் கொலை செய்தனரா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வலைவீசி தேடும் போலீஸ்
அதே பகுதியில் ஏற்கெனவே விக்கி என்ற இளைஞர் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. கொலை செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பேருந்து நிலையம்
குறிப்பாக நேற்று காட்டாங்கொளத்தூர் பேருந்து நிறுத்தத்தில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சில நாட்களாக மறைமலைநகர் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொலை சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது. தற்போது மீண்டும் ஒரேநாளில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்றதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை எற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications