‛‛உள்ளே வரக்கூடாது’’.. வைத்தீஸ்வரன் கோவிலில் மாற்றுத்திறனாளிக்கு அனுமதி மறுப்பு.. காரணத்தை பாருங்க
தஞ்சாவூர்: சீர்காழியில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் சக்கர நாற்காலியில் சென்று தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக மாற்றுத்திறனாளி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரசித்திப்பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நியைில் தான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் நாராயணன் என்பவர் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்றார். ரமேஷ் நாராயணன் ஒரு மாற்றுத்திறனாளி. அவரால் நடக்க முடியாது. இதனால் வீல் சேரில் தான் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அவர் சென்றார்.
அப்போது அவரை அங்கிருந்தவர்கள் வைத்தீஸ்வரனை தரிசிக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது வைத்தீஸ்வரனை வீல்சேரில் சென்று தரிசிரிக்க முடியாது. வேண்டுமென்றால் தவழ்ந்து போய் தரிசனம் செய்யுங்கள் எனக்கூறி ரமேஷ் நாராயணனை தடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி ரமேஷ் நாராயணன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
என் பெயர் ரமேஷ் நாராயணன். நான் தஞ்சாவூரை சேர்ந்தவன். வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்தேன். நான் ஒரு மாற்றுத்திறனாளி. என்னால் நடக்க முடியாது. கோவிலில் எல்லா தரிசனத்தையும் செய்தேன். ஆனால் வைத்தீஸ்வரனை மட்டும் தரிசனம் செய்யவில்லை. ஏனென்றால் வைத்தீஸ்வரன் சன்னத்தியின் முன்பு இருந்த வரிசையில் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வீல் சேரில் சென்று என்னை தரிசனம் செய்ய அனுமதி மறுத்துவிட்டனர்.
சாமி முன்பு வீல்சேரில் செல்வது என்பது ஐதீகம் இல்லை என கூறிவிட்டனர். அதேவேளையில் வீல்சேரை விட்டு வந்து சாமியை பாருங்கள் என கூறினர். மேலும் வீட்டில் எப்படி நடமாடுவீர்கள்? என்று கேட்டனர். அதற்கு தவழ்ந்து செல்வேன் என்றபோது தவழ்ந்து சென்று தரிசனம் செய்யும்படி கூறினர். இது எனக்கு வருத்தமளிக்கிறது. என்னை மாற்றுத்திறனாளியாக நினைக்க வைக்கிறீர்கள்.
மேலும் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள். கோவில் ரூல்ஸ் இதுதான். கோவிலின் ஐதீகம் இதுதான். நாங்கள் எதையும் மாற்ற முடியாது என கூறிவிட்டனர். இது எந்த வகையான நடைமுறை என எனக்கு தெரிவில்லை. இந்த பதிவை நான் ரொம்ப வருத்தத்தில் தான் பதிவிடுகிறேன். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்'' என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications