எனக்கு செய்தி வந்திருக்கு... எடப்பாடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்... ஸ்டாலின்
Recommended Video

தஞ்சை: காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமல்ல... எஞ்சிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் வரும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறி உள்ளார்.
தஞ்சையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திலகர் திடலில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
லோக்சபா வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டசபை தொகுதி வேட்பாளர் நீலமேகம் ஆகியோரை ஸ்டாலின் அறிமுகப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்
அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டிய தேர்தல் இது. ஆனால் 18 தொகுதிகளுக்கான தேர்தல் இடையிலே வந்தது. இந்த தொகுதிகளிலே அவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. அதற்கு என்ன காரணம்.

18 பேரும் ஆதரவு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, ஆட்சிக்கு எதிராக இருந்ததால் அவர்கள் பதவியை இழந்துள்ளார். அந்த 18 பேரும் ஜெயலலிதா இருந்த அவருக்கும், அதிமுகவுக்கும் ஆதரவாக இருந்தவர்கள்.
[குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்கள்.. ஒரு விறுவிறு தகவல் தொகுப்பு]

நினைக்க வேண்டாம்
அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம். ஆட்சி இருக்க வேண்டும் என்று நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்.

தேர்தல் நிச்சயமாக வரும்
ஆனால்... ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக இருந்தவர்கள் தற்போது எம்எல்ஏக்களாக இருக்கின்றனர். மொத்தம் 18 தொகுதிகளுக்கு மட்டுமல்ல... எஞ்சிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் வரும்.

ஆட்சி முடியும்
அதற்கான செய்தி எனக்கு வந்திருக்கிறது. தேர்தலின் முடிவில்... விரைவில் தமிழகத்தில் இருக்கும் இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கஜா புயல் பாதிப்பு
கஜா புயலின் போது 5 நாட்கள் கழித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றார். கேட்டால்... சேலத்தில் கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறுகிறார். அதன் பிறகு ஹெலிகாப்டரில் வந்து சென்றார்.

அறிக்கை இல்லை
அவர் மட்டுமே... பிரதமர் மோடி ஒரு அறிக்கை விடவில்லை. தமிழகத்தில் உள்ளவர்கள் இளிச்சவாயர்களா? ஏமானந்த் சோனகிரியா? ஆனால் மோடி இப்போது ஏழையின் மகன் என்கிறார். ஆனா.. விதவிதமாக ஆடைகள் அணிகிறார். வெளிநாடுகளுக்கு செல்கிறார் என்று பேசினார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications