ஜோதிகா சொன்ன ஆஸ்பத்திரியில் 10 பாம்புகள்.. கர்ப்பிணிகள் அலறி ஓட்டம்.. பெண் ஊழியரை தீண்டியதால் ஷாக்!
தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் 10 பாம்புகள் பிடிபட்டதால் பரபரப்பு
தஞ்சை: ஜோதிகா சொன்ன ஆஸ்பத்திரியில் 10 பாம்புகள் பிடிபட்டுள்ளன... கர்ப்பிணி பெண்கள் அந்த பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடி உள்ளனர்.. ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் பெண் ஊழியர் செல்வியையும் இந்த விஷப் பாம்புகளில் ஒன்று கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
சமீபத்தில் ஜோதிகா ஒரு திரைப்பட விருது விழாவில் பேசும்போது ஒரு கருத்தை சொல்லி இருந்தார்... "தஞ்சை அரசு ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி முறையாக பராமரிக்கப்படவில்லை. அதன் பராமரிப்பு ரொம்ப மோசமாக உள்ளது.
அங்கே நான் என்ன பார்த்தேன் என்பதை விவரித்து சொல்லக்கூட முடியவில்லை.. ஸ்கூல்கள், ஆஸ்பத்திரிகளையும் கோயில்கள் போலவே உயர்வாக கருத வேண்டும்" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

குறைபாடு
ஜோதிகா இப்படி பேசியது ஒருசிலரால் மாபெருங் குற்றமாக பார்க்கப்பட்டது.. சர்ச்சையாக்கப்பட்டது.. தனிப்பட்ட வார்த்தை தாக்குதல்கள் ஜோதிகா மீது வீசப்பட்டன.. சுகாதார குறைபாடு, ஆன்மீக பிரச்சனையாக திரித்து கூறப்பட்டன.. சோஷியல் மீடியா முழுவதும் காரசார விவாதங்கள் எழுந்து அடங்கின!!

ஆஸ்பத்திரி
இந்நிலையில் ஜோதிகா சுட்டிக்காட்டிய அந்த தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக வேலை பார்க்கும் செல்வி என்பவரையும் பாம்பு கடித்துள்ளது.. வேலை முடித்துவிட்டு, ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள குவார்ட்டஸுக்கு இவர் சென்று கொண்டிருந்தபோது, பாம்பு தீண்டியுள்ளது.. இதையடுத்து அந்த பெண் ஊழியருக்கு உடனடியாக சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

கோவிந்தராவ்
இந்த தகவல் அறிந்து கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவின்பேரில் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள புதர்கள், மண்டிகளை ஜேசிபி மிஷின் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது... மற்றொரு புறம், வனவிலங்கு ஆர்வலர்கள் கொண்டு பாம்புகளை பிடிக்கும் பணியும் நடந்தது.. இதில், மொத்தம் 10 பாம்புகள் இதுவரை பிடிக்கப்பட்டுள்ளன.. இதில் 5 பாம்புகள் பயங்கரமான விஷத்தன்மை கொடியவை.. ஐந்து கட்டுவிரியன் பாம்புகளும் பிடிபட்டுள்ளன. ஆஸ்பத்திரியை சுற்றி புதர்கள் மண்டி கிடப்பதால்தான் பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது..

ஊழியர்கள்
இதனால், ஊழியர்கள் மட்டுமன்றி கர்ப்பிணிப் பெண்கள், ஆஸ்பத்திரிக்கு தினமும் வந்து போகும் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனராம். இது ஒரு பழமையான மருத்துவமனை என்பதால் பயன்படுத்தப்படாத கட்டிங்களும் அங்கு உள்ளதாக சொல்லப்படுகிறது. பகல் நேரத்திலும் பாம்புகள் அலைகிறதாம்.. இதை பார்த்து சில கர்ப்பிணி பெண்கள் அலறியதாகவும் கூறுகிறார்கள். எனினும் சரியான நேரத்தில் கலெக்டர் கோவிந்தராவ் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்ததற்கு அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன!!
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications