என்னாது.. திமுக பிரமுகர் ரூ.100 கோடி சொத்து ஆக்கிரமிப்பா?.. ஆக்ஷனில் இறங்கிய தஞ்சை மாநகராட்சி
திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பு கட்டிடம் இன்று இடித்து தள்ளப்பட்டது
தஞ்சை: தஞ்சையில் திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா வளாகத்திலிருந்த விதிமீறல் கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.
தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பழமையான சுதர்சன சபா உள்ளது... இது வாடகை அடிப்படையில் 99 ஆண்டுகளாக குத்தகைக்கு மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டது...
திமுக பிரமுகர் ஒருவர்தான், இந்த சபாவை குத்தகைக்கு எடுத்திருந்தார்.. ஆனால், சபா வளாகத்தில் பார், பேக்கரி, செல்போன் கடை, ரெஸ்ட்டாரண்டுகள் போன்றவை கட்டப்பட்டு, உள்வாடகைக்கு விடப்பட்டிருந்தது...

திமுக பிரமுகர்
இது விதிமீறல் ஆகும்.. இதன் மூலம் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாயும் வருவாய் இழப்பும் ஏற்பட்டது... எனவே, நகர ஊரமைப்பு சட்டம் 1971 விதிகளின்படி, உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டு உள்வாடகைக்கு விடப்பட்டிருந்த அனைத்து கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூட்டி சீல் வைத்தனர்.. மேலும், சம்பந்தப்பட்ட திமுக பிரமுகரிடம் இருந்த சுதர்சன சபாவை ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டம் 1975-ன்படி, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக கையகப்படுத்தினர்.

தண்டோரா
இதையடுத்து அந்த இடத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.. கையகப்படுத்துவதற்கான தண்டோராவும் ஊர் முழுக்க போடப்பட்டது.. கையகப்படுத்திய இடத்தில் உள்ள பொருட்களை வெளியே எடுத்துக் கொள்ள ஒரு வார காலம் அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தின் மதிப்பு இப்போதைக்கு மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என்கிறார்கள்..

மாநகராட்சி
ஒப்பந்த தொகையான ரூ.20 கோடியும் மாநகராட்சிக்கு செலுத்தவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், மாவட்ட கலெக்டர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள், இன்று சுதர்சன சபாவில் இருந்த அனைத்து கடைகளையும் மிஷின் வைத்து இடித்து தள்ளினார்கள்.. இந்த பணி துவங்குவதற்கு முன்னதாக, 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக அங்கே குவிக்கப்பட்டனர்..

நடவடிக்கை
அதாவது இந்த இடம், 100 வருடங்கள் குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வந்த நிலையில், ஒப்பந்த காலம் முடிந்து, அதனை மாநகராட்சியிடம் ஒப்படைக்காமல், உள்ளூர் திமுக பிரமுகர்கள் இடத்தை ஆக்கிரமித்து, அங்கு மதுபான கடை, பார் உள்ளிட்டவைகள் விதிகளை மீறி நடத்தி வந்ததாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications