தேனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் 2024: டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி! கதறும் பெற்றோர்
தேனி: தேனியில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்தின் போது டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலியான சோகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி விழா நேற்றுமுன் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி ஆங்காங்கே பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டன.

இவற்றை ஊர்வலமாக விழா குழுவினர் அழைத்து சென்றனர். அந்த வகையில் தேனியில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் போது டிராக்டரில் வைத்து விநாயகரை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
அப்போது அந்த டிராக்டருடன் பக்தர்கள் சென்றுக் கொண்டிருந்தனர். விழாவின் போது விநாயகர் சிலையை டிராக்டரில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார் காயமடைந்த 2 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications