Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனி ஸ்வீட் கடையை திறந்த போது.. உள்ளே இருந்து வந்த குறட்டை சத்தம்.. எழுப்பினால் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி பழைய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு இனிப்பு கடையை திறக்க நேற்று அதிகாலை அங்கு வேலை பார்க்கும் தொழிலாளி வந்தார். அந்த கடைக்கு கதவு கிடையாது. தார்ப்பாய் போட்டு மூடப்பட்ட நிலையில் இருந்தது. அப்போது திரையை விலக்கி பார்த்த போது, கடைக்குள் திருடச் சென்ற இளைஞர், அசதியில் அங்கேயே தூங்கிவிட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி அல்லிநகரம் வடக்கு தெருவை சேர்ந்த 34 வயதாகும் நாகேந்திரன் என்பவர் தேனியை அடுத்த அரண்மனைப்புதூரில் சத்திரப்பட்டி செல்லும் சாலையில் இறைச்சி விற்பனை கடை வைத்திருக்கிறார். கடந்த 24-ந்தேதி இவர், தனது கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றிருக்கிறார். மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருக்கிறது. அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

theni thief money

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் அங்கு சென்று பதிவான கைரேகைகளை சேகரித்தார்கள். திருடிய நபரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், தேனி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஒரு இனிப்பு கடையை திறக்க நேற்று அதிகாலை அங்கு வேலை பார்க்கும் தொழிலாளி வந்திருக்கிறார். அந்த கடைக்கு கதவு கிடையாது. தார்ப்பாய் போட்டு மூடப்பட்ட நிலையில் இருந்திருக்கிறது.

தார்ப்பாயை அவர் விலக்கி பார்த்தபோது, கடைக்குள் சுமார் 18 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூங்கி கொண்டு இருந்தார். சந்தேகம் அடைந்த தொழிலாளி, அக்கம் பக்கத்தில் இருந்த கடைக்காரர்கள் உதவியுடன் போலீசாருக்கு தகவல் அளித்தார்
அதன்பேரில் தேனி போலீசார் அங்கு வந்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

முதலில் அவர் குளிர் அதிகமாக இருந்ததால் கடைக்குள் வந்து தூங்கினேன் என்று கூறியதாக தெரிகிறது. பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரித்த போது அவர் கடைக்குள் திருட வந்ததாகவும், திருட வந்த போது அசதியில் தூங்கி விட்டதாக சர்வ சாதாரணமாக கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் தங்கள் பகுதியில் இறைச்சிக் கடையில் திருடிய சம்பவத்தில் அந்த வாலிபருக்கு தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் விசாரித்து பார்த்தனர். அதன் பின்னர் பழனிசெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கைரேகைகளை பதிவு செய்து, இறைச்சி கடையில் பதிவான கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அவை ஒத்துப்போயிருக்கிறது. இதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட வந்த இடத்தில் திருடன் தூங்கியதால் மாட்டிக் கொண்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+