தேனி ஸ்வீட் கடையை திறந்த போது.. உள்ளே இருந்து வந்த குறட்டை சத்தம்.. எழுப்பினால் ட்விஸ்ட்
தேனி: தேனி பழைய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு இனிப்பு கடையை திறக்க நேற்று அதிகாலை அங்கு வேலை பார்க்கும் தொழிலாளி வந்தார். அந்த கடைக்கு கதவு கிடையாது. தார்ப்பாய் போட்டு மூடப்பட்ட நிலையில் இருந்தது. அப்போது திரையை விலக்கி பார்த்த போது, கடைக்குள் திருடச் சென்ற இளைஞர், அசதியில் அங்கேயே தூங்கிவிட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி அல்லிநகரம் வடக்கு தெருவை சேர்ந்த 34 வயதாகும் நாகேந்திரன் என்பவர் தேனியை அடுத்த அரண்மனைப்புதூரில் சத்திரப்பட்டி செல்லும் சாலையில் இறைச்சி விற்பனை கடை வைத்திருக்கிறார். கடந்த 24-ந்தேதி இவர், தனது கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றிருக்கிறார். மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருக்கிறது. அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் அங்கு சென்று பதிவான கைரேகைகளை சேகரித்தார்கள். திருடிய நபரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், தேனி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஒரு இனிப்பு கடையை திறக்க நேற்று அதிகாலை அங்கு வேலை பார்க்கும் தொழிலாளி வந்திருக்கிறார். அந்த கடைக்கு கதவு கிடையாது. தார்ப்பாய் போட்டு மூடப்பட்ட நிலையில் இருந்திருக்கிறது.
தார்ப்பாயை அவர் விலக்கி பார்த்தபோது, கடைக்குள் சுமார் 18 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூங்கி கொண்டு இருந்தார். சந்தேகம் அடைந்த தொழிலாளி, அக்கம் பக்கத்தில் இருந்த கடைக்காரர்கள் உதவியுடன் போலீசாருக்கு தகவல் அளித்தார்
அதன்பேரில் தேனி போலீசார் அங்கு வந்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
முதலில் அவர் குளிர் அதிகமாக இருந்ததால் கடைக்குள் வந்து தூங்கினேன் என்று கூறியதாக தெரிகிறது. பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரித்த போது அவர் கடைக்குள் திருட வந்ததாகவும், திருட வந்த போது அசதியில் தூங்கி விட்டதாக சர்வ சாதாரணமாக கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் தங்கள் பகுதியில் இறைச்சிக் கடையில் திருடிய சம்பவத்தில் அந்த வாலிபருக்கு தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் விசாரித்து பார்த்தனர். அதன் பின்னர் பழனிசெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கைரேகைகளை பதிவு செய்து, இறைச்சி கடையில் பதிவான கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அவை ஒத்துப்போயிருக்கிறது. இதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட வந்த இடத்தில் திருடன் தூங்கியதால் மாட்டிக் கொண்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications