திமுக நிகழ்ச்சியில் ஒலித்த எம்.ஜி.ஆர். பாடல்! உதயநிதி ஸ்டாலின் ரியாக்ஷன்? தேனி டூர் ருசிகரம்!
தேனி: தேனி மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட திமுக நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல் ஒலித்தது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
திமுக இளைஞரணி மாநாடு: திமுக இளைஞரணி 2வது மாநாடு வரும் டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை ஒட்டி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று தேனி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்தார்.

மாபெரும் சபைகளில் நீ நடந்தால்: தேனி வடக்கு -தெற்கு என இரண்டு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் வீரபாண்டி அருகே நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையேறியதும், ''மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்.. மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்'' என்ற எம்.ஜி.ஆர். பட பாடல் ஒலிபரப்பப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் ரியாக்ஷன்: பொதுவாக உதயநிதி ஸ்டாலின் மேடையேறும் தருணங்களில் ''கருப்பு சிவப்பு படையின் வீரன்'' என்ற இறையன்பன் குத்தூஸின் பாடல் தான் ஒலிப்பரப்பப்படும். ஆனால் தேனியில் எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கவிடப்பட்டது கட்சியினர் மத்தியில் லேசாக சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோ சிறிய புன்னகையுடன் பெரிதாக வேறு எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. இந்தப் பாடல் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்தா அல்லது அவருக்கு அறிவுரை சொல்லவா என்ற விவாதமும் தேனி மாவட்ட திமுக நிர்வாகிகள் மத்தியில் நிலவியது.

ஆப்ரேட்டர் செய்த வேலை: தேனி மாவட்டத்தை பொறுத்தவரை இன்னுமே பல இடங்களில் எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய தாக்கம் குறையவில்லை என்றே சொல்லலாம். அந்த வகையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஒலி -ஒளி அமைத்த ஆப்ரேட்டர் சாய்ஸில் தான் எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கவிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை தான் ஒலிக்கவிட வேண்டும் என திமுக நிர்வாகிகள் யாரும் முன்கூட்டியே சொல்லாததால் அவராக அந்தப் பாடலை ஒலிக்க விட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications