Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரமசிவன் கழுத்தில் நெளிந்த பாம்பு! சூலாயுதத்தின் மீது ஏறி நின்று.. மெய்சிலிர்த்த பக்தர்கள்! வீடியோ

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் கூடலூர் தாமரைகுளம் ஈஸ்வரன் திருக்கோவிலில் சூலாயுதத்தின் மேல் ஏறி சிவனை பாம்பு வழிபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் அந்த பாம்பு சிவலிங்கத்தை தரிசனம் செய்வதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை அவ்வப்போது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். வேப்பமரத்தில் இருந்து பால் வருகிறது, சிவபெருமானை பாம்பு வழிபடுகிறது என்பது போன்ற செய்திகள் வெளியாவது வழக்கம் தான்.

ஒரு சிலர் இதற்கு மறுப்பு தெரிவித்தாலும், பெரும்பாலான பக்தர்கள் அது கடவுளின் செய்கை தான் என கூறி மெய் சிலிர்க்கின்றனர். உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும் பக்தர்களுக்கு அது கடவுளாகவே தெரிகிறது.

Theni Snake Lord Shiva

அந்த வகையில் தேனியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சிவன் கோவிலில் நாகப்பாம்பு வந்து சிவனை தரிசனம் செய்வதாக கூறுகின்றனர். இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு வந்த நாகப்பாம்பு சிவனின் கழுத்தில் ஏறியதோடு சூலாயுதத்தின் மீது ஏறி நின்று சிவனை தரிசித்ததாக வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் கூடலூர் அருள்மிகு தாமரைக்குளம் ஈஸ்வரன் கோவிலில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று நாகராஜா (பாம்பு) சிவலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் கூறி வந்தனர். இந்த பாம்பு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தினங்களில் சிவன் சிலை மீது ஏறி வழிபாடு நடத்துவதாக கோவில் பூசாரிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சில பக்தர்கள் கூறியதை யாரும் நம்பவில்லை.

இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் நிச்சயமாக அந்தப் பாம்பு மீண்டும் கோவிலுக்கு வரும் என்று பூசாரிகளும் ஒரு சில பக்தர்களும் காத்திருந்தனர். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற மாதிரி நேற்று மாலை சரியாக 6 மணி அளவில் மீண்டும் அந்த கோவில் கருவறைக்குள் நுழைந்த அந்தப் பாம்பு சிவன் சிலை மீது ஏறி, சிவனின் சூலாயுதத்தில் நின்று சிவனை வழிபட்டது.

இதனை பூசாரிகளும் பக்தர்களும் தங்களது செல்போனில் படம் பிடித்ததுடன், ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று முழக்கங்களை எழுப்பி வழிபாடு செய்தனர். வழிபாடு நடத்தி முடித்த பின்னர் அந்தப் பாம்பு வழக்கம் போல கோவில் கருவறையை விட்டு வெளியே சென்று விட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது," ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறிப்பிட்ட நேரத்தில் அந்த நாகப்பாம்பு இந்த கோவிலுக்கு வருகிறது என பலமுறை சொல்லி இருக்கிறோம். ஆனால் நிறைய பேர் அது பொய் என சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை நாங்கள் கடவுளின் செயல் என்பதால் வீடியோ எடுக்கவில்லை.

இந்த நிலையில் சிவபெருமானுக்கு வழிபாடு செய்ய வரும் பாம்பு குறித்த செய்தியை உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது அதனை நாங்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளோம். மேலும் பாம்பு தரிசனம் செய்வது குறித்து ஏராளமானோர் நேரில் வந்து பார்த்தனர். அதற்குப் பிறகுதான் பலர் அதை நம்பினர். இன்று மட்டுமல்ல அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வந்தாலும் சரியான நேரத்தில் அந்த பாம்பு வந்து சிவபெருமானை வழிபடும்" என உறுதியாக சொல்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+