Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊரை சுற்றி கடன் வாங்கி! ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு.. ரூ 53 லட்சத்தை இழந்ததால் போடி இளைஞர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

தேனி: ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ 53 லட்சம் இழந்த நிலையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போடி அருகே உள்ள ரங்கநாதபுரம் வ.உ.சி நகரை சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மகன் தனவந்தன் (26). இவர் போடியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார்.

Youth commits suicide after he lost Rs 53 lakhs in online trading

இவருடைய மனைவி பிரியா (23). இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தனவந்தன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வந்தார். இதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆனாலும் அவருக்கு தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் ரூ 53 லட்சம் வரை முதலீடு செய்து அந்த பணத்தை இழந்தார். இந்த நிலையில் பணத்தை கடனாக கொடுத்தவர்கள் எல்லாம் தன்வந்தனிடம் திருப்பி கேட்டனர். ஆனால் அவரால் கொடுக்க முடியவில்லை.

இதனால் தன்வந்தன் மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது தனவந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இரவு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்த போது தனவந்தன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் வர்த்தகத்தில் நம்பி ஏமாந்து வாழ்க்கையை தொலைக்க வேண்டாம் என மத்திய ,மாநில அரசுகள் அறிவுறுத்தி வந்தாலும் பல இளைஞர்கள் இந்த ஆன்லைன் மோகத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+