குற்றாலத்தில் இருந்து சோகத்துடன் மதுரை திரும்பிய 18 பேர்..பின்னணி என்ன?
குற்றாலம்: தகுதி நீக்க வழக்கு தீர்ப்புக்காக குற்றாலத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் பாதகமான தீர்ப்பை அடுத்து குற்றாலம் ரிசார்ட்டை பேக் அப் செய்து மதுரை செல்கின்றனர்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எப்போதும் வேண்டுமானாலும் தீர்ப்பு வெளியாகும் என்பதால் பாதுகாப்பு கருதி தினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இரு நாட்களும் வாக்கிங் செல்வது, லெமன் டீ குடிப்பது, புஷ்கரணியில் குளியல் என ஜாலியாக பொழுதை கழித்தனர். இந்த சந்தோஷத்தில் திடீரென இடியாக வந்து பாய்ந்தது தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு.
அதாவது தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியே என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இதை கேட்டு 18 பேரும் ஆடி போய்விட்டனர். சிலர் கண்கள் கலங்கின.
[புது குழப்பம்.. தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் இடைத் தேர்தலில் போட்டியிட முடியாதா?]
இந்நிலையில் அடுத்த கட்ட முடிவுக்காக தினகரன் குற்றாலத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள ரிசார்ட்டை காலி செய்துவிட்டு 18 பேரும் மதுரை புறப்பட்டனர். குற்றாலத்துக்கு வரும் போது ஜாலியாக இருந்த இவர்கள் தற்போது சோகத்துடன் மதுரை திரும்புகின்றனர்.
இதற்கான காரணம் தெரியவில்லை. மதுரை வந்து விமானம் மூலம் அவரவர் வீடுகளுக்கு செல்கின்றனரா இல்லை அங்கு தினகரனை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனரா என தெரியவில்லை. நாளைக்குள் தீர்ப்பை மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications