திசையன்விளையில் நடந்த திருப்பம்.. திமுக கைக்கு நழுவிப்போன வெற்றி.. அதிமுகவிற்கு கைகொடுத்த அதிருஷ்டம்
திருநெல்வேலி: திசையன்விளை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது. பேரூராட்சி தலைவராக அதிமுகவின் ஜான்சி ராணி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பிப்ரவரி 19ல் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் திமுக அதிகமாக வென்றிருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்திலும் திமுகவே அதிக இடங்களில் வாகை சூடியிருந்தது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் மட்டும் திமுகவுக்கு சறுக்கல் ஏற்பட்டது. மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக 9, திமுக, காங்கிரஸ் தலா 2, பாஜக, தேமுதிக தலா ஒன்று, சுயேச்சைகள் 3 இடங்களிலும் வென்றனர்.

போலீஸ் பாதுகாப்பு
மேலும் பேரூராட்சி கவுன்சிலர்களாக ஜான்சிராணி, ஜெயக்குமார், ஆறுமுக தேவி, பிரதீஷ் குமார், உமா, சண்முகவேல், முத்துக்குமார், பிரேம்குமார், தனசீலன் ஈஸ்வரி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு கோரி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு 9 பேருக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

வேட்பாளர் மாற்றம்
இதற்கிடையே திமுக சார்பில் சுபினா என்பவரை பேரூராட்சி தலைவராக திமுக அறிவித்தது. இன்று காலை திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் தேர்வுக்கான தேர்தல் நடந்தது. ஆனால் திமுகவின் சுபினாவுக்கு திமுக சார்பில் ஆதரவு தெரிவிக்கவில்லை. இவருக்கு யாரும் முன்மொழியவில்லை. கமலா நேரு என்பவர் திமுக கூட்டணி சார்பில் கமலா நேரு என்பவர் தலைவராக்க முன்மொழிந்தனர்.

குலுக்கலில் அதிமுக வெற்றி
அதிமுக சார்பில் 3வது வார்டு கவுன்சிலர் ஜான்சிராணி தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட இருவரும் தலா 9 ஓட்டுகள் பெற்றனர். இதனால் குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு செய்யப்பட்டது. இதில் அதிமுகவின் 3வது வார்டு கவுன்சிலர் ஜான்சிராணி வெற்றி பெற்று பேரூராட்சி தலைவரானார்.

திமுக கூட்டணியில் அதிமுக
இந்த மறைமுக தேர்தலின்போது பாஜக கவுன்சிலர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் ஒரு அதிமுக கவுன்சிலர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் தான் தலைவர் வேட்பாளர்கள் 9 ஓட்டுகள் பெற்றனர். இல்லாவிட்டால் எளிமையாக அதிமுக வெற்றி பெற்றிருக்கும். குலுக்கல் முறையில்தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications