குற்றாலத்தில் மீண்டும் சிறுத்தை.. மெயின் அருவியில் வாக்கிங் போனதால் பரபரப்பு
குற்றாலம்: நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயினருவிப்பகுதி வனப்பகுதியாகும். இங்குள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் வனப்பகுதி தொடங்கிவிடுகிறது. இந்த பகுதியில் மிருகங்கள் நடமாட்டம் அறவே இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகாலமாக செண்பகாதேவி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட பின்னர் வனப்பகுதியில் வனவிலங்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது மழையில்லாததால் அருவிகளும் வெறிச்சோடி வருவதால் வனவிலங்குகள் உணவுத்தேடி ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக கடந்த 9ஆம் தேதி குற்றாலம் கார் பார்க்கிங் பகுதியில் காலையில் அங்குள்ள பாறையின் மீது 2 சிறுத்தைகள் உலா வந்தது தெரிய வந்தது. இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து விட்டு வரும்போது அந்த பகுதியிலுள்ள பாறையில் ஒரு சிறுத்தை உலா வந்துள்ளது.
இதனைக் கண்ட சுற்றுலா பயணிகள் கை தட்டி ஆரவாரம் செய்யவே சிறுத்தை பாறையின் இடுக்கில் பதுங்கியது. பின்னர் மக்களின் சப்தம் கேட்டு மரம் செடி கொடிகள் நிறைந்த பகுதிக்கு சென்று விட்டது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். இது குறித்து குற்றாலம் வனத்துறையினர் தெரிவிக்கும் போது ஏற்கனவே இங்கு 22 சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாகவும், நீண்டகால இடைவெளிக்குப் பின் இப்போது மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம் தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications