Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்காசியிலிருந்து திமுக தலைமைக்கு குவியும் புகார் கடுதாசிகள்! சர்ச்சையின் பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் மீதான புகார்களை இந்த முறை சற்று சீரியஸாக விசாரித்து வருகிறது திமுக தலைமை.

எப்போதாவது ஒன்றிரண்டு சர்ச்சையில் சிக்கினால் சரி, எப்போதுமே சிவபத்மநாதன் சர்ச்சையில் சிக்குவதால் தலைமைக்கு இது பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.

குறிப்பாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு தான் இவர் மீதான புகார்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

தென்காசி தெற்கு

தென்காசி தெற்கு

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் மீது சங்கரன்கோவிலை சேர்ந்த திமுக இளம் கவுன்சிலர் ஒருவர் அளித்த புகார் தான் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக கோபம் கொள்ளச் செய்துள்ளது. பணம் விவகாரம் தொடர்பான அந்தப் புகாரை உடனடியாக விசாரிக்கத் தொடங்கிய உதயநிதி தரப்பு, சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜாவையும் அழைத்து என்ன நடந்தது என்ற விவரத்தை சேகரித்திருக்கிறது.

 சுரண்டை நகராட்சி

சுரண்டை நகராட்சி

இதேபோல் திமுகவுக்கு வெற்றிவாய்ப்புள்ள சுரண்டை நகராட்சியில் காங்கிரஸ் கட்சியுடன் பக்குவமாக பேசி காரியம் சாதிக்காமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது அவசர கதியில் அவர் செயல்பட்டதும் முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் கோபத்தை கொடுத்திருக்கிறது. இதேபோல் தலைமை அறிவித்த உமாதேவி என்ற வேட்பாளருக்கு போட்டி வேட்பாளராக சுதா மோகன்லாலை நிறுத்தி வெற்றிபெற வைத்த விவகாரமும் ஏற்கனவே அறிவாலயத்திற்கு புகாராக சென்றது.

தொடர் சர்ச்சை

தொடர் சர்ச்சை

இதேபோல் தனது சொந்த நிதியை வாரி வாரி செலவு செய்து வந்த திமுக முன்னாள் வர்த்தகர் அணி நிர்வாகி அய்யாதுரை பாண்டியன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, என பலரிடமும் இவருக்கு ஏழாம் பொருத்தம் தான். அய்யாதுரை பாண்டியன் இன்று திமுகவிலேயே இல்லை என்பது தனிக்கதை. இதனிடையே தேர்தலின் போது பெண் காவல் ஆய்வாளரிடம் சரிக்கு சரியாக சாலையில் நின்று சண்டை போட்டது என இவர் மீதான சர்ச்சைகளை பட்டியலிடுகிறார்கள் தென்காசி உடன்பிறப்புகள்.

அறிவாலயம் புள்ளி

அறிவாலயம் புள்ளி

அறிவாலயம் முக்கிய புள்ளி ஒருவரும், தென் மாவட்டத்தை சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவரும் தான் சிவபத்மநாதனுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பதாக கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். சட்டசபை கூட்டத்தொடர் முடியும் வரை இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுமைக் காப்பார் என்றும் அதற்கு பிறகு சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+