Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளி மாணவியை காதல் வலையில் சிக்க வைத்த பாதிரியார் கைது.. ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக சிஎஸ்ஐ தேவாலயத்தை சேர்ந்த பயிற்சி பாதிரியார் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் போலீஸ் ஆயுதப்படை மைதானம் பகுதியைச் சேர்ந்த இன்பராஜின் மகன் மில்டன் கனகராஜ் (26). இவர் பாதிரியார் ஆவதற்கான படிப்பை முடித்துக் கொண்டு கேடிசி நகர் சிஎஸ்ஐ ஆலயத்தில் பயிற்சி பாதிரியாளராக உள்ளார்.

CSI pastor arrested for sexually assaulting a minor girl

இவரது வீட்டுக்கு அருகே வசித்து வந்த ஒரு மாணவி அவ்வப்போது சர்ச்சுக்கு வரும் போது கனகராஜுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென அந்த மாணவியை கனகராஜ் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது.

இதை நம்பிய அந்த சிறுமி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இன்பராஜுடன் பழகி வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து பாதிரியாரின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு இடத்தில் பெண் பார்த்து வந்தனர். இது அந்த மாணவியின் காதுகளை எட்டியது.

இதையடுத்து அந்த மாணவி கனகராஜிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். அதற்கு கனகராஜும் அவரது பெற்றோரும் இந்த சிறுமியை அவதூறாக பேசியுள்ளதாக தெரிகிறது. மேலும் கனகராஜின் திருமணத்தில் பிரச்சினை செய்தால் உயிரோடு எரித்துக் கொன்று விடுவதாகவும் மிரட்டினாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தாலுக்கா போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மில்டன் கனகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+