குருவாயூர் எஸ்பிரஸ் ரயிலுக்குள் கடும் சண்டை.. அபாய சங்கிலியை இழுத்த பயணிகள்.. அதிர்ந்த திருநெல்வேலி
திருநெல்வேலி: சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் குருவாயூருக்கு சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள திருநெல்வேலியில் கடுமையாக மோதிக் கொண்டனர். இதையடுத்து அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது.
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக கேரள மாநிலம் குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இருமார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை சென்னையில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் புறப்பட்டு வந்தது. இந்த ரயிலில் கார்டுக்கு முந்தைய முன்பதிவில்லா பெட்டியில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதில் சிலர் மதுபோதையில் பயணம் செய்து வந்துள்ளாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கேரளாவை சேர்ந்த பயணிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

அந்த ரயில் திருநெல்வேலி ஜங்சனுக்கு இரவு 8.35 மணி அளவில் வந்தது. அப்போது, அங்கு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த ரயில் கார்டு பைஜூ, பயணிகளை எச்சரித்தார். பின்னர் 9 மணி அளவில் மீண்டும் ரயில் புறப்பட்டது. அப்போது பயணிகள் இடையே தகராறு முற்றியதில் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதைக்கண்ட சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.
இதனால் திருநெல்வேலி மீனாட்சிபுரம் ரயில்வே கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இருபுறத்தில் கேட் மூடப்பட்டு இருந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி தகவல் அறிந்து திருநெல்வேலி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை கண்டதும் ரயிலில் இருந்து 4 பேர் இறங்கினார்கள். அதில் ஒருவர் ஜசில் ஜமால் (வயது 35) என்பதும், மேலும் ஒரு வாலிபர், 2 இளம்பெண்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள், சக பயணிகள் தாக்கியதில் 2 பேருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதில் 2 பேர் லேசான காயம் அடைந்திருந்தனர்.. இதையடுத்து போலீசார், 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ரயிலை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.
இதனிடையே திருநெல்வேலி ரயில்வே போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று 4 பேரிடமும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவம் நடந்த பெட்டியில் உள்ள பயணிகளிடமும், கார்டு பைஜுவிடமும் விசாரணை நடத்துமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் திருநெல்வேலியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications