தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்.. ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி கடலில் கலக்கும் 5000 கன அடி நீர்!
நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி 5000 கன அடி தண்ணீர் வெளியேறி கடலுக்குச் செல்கிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடையம் பகுதியில் உள்ள கடனா நதி அணையில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, அணையில் இருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நெல்லை மாநகர் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற குறுக்குத்துறை முருகன் கோவிலிலை தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஆற்றின் இரு கரைகளையும் தண்ணீர் தொட்டுச் செல்கிறது. இந்த நிலையில், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் அணையில் இருந்து பிரியும் மேலக்கால் வாய்க்காலில் இருந்து வினாடிக்கு 1030 கன அடி தண்ணீரும் கீழக்கால் வாய்க்காலில் இருந்து வினாடிக்கு 333 கன அடி தண்ணீரும் திறந்துவிடப் பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அணை வடகால் வாய்க்காலில் இருந்து வினாடிக்கு 1093 கன அடி தண்ணீரும் தென்கால் வாய்க்காலில் இருந்து வினாடிக்கு 1230 கன அடி தண்ணீரும் வறட்சியான பகுதியான சாத்தான்குளம் பகுதிக்கு தண்ணீர் செல்லும் சடையனேரி கால்வாயில் இருந்து வினாடிக்கு 400 கன அடித் தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணல் மேடாகி தூர்ந்து போன நிலையில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி வினாடிக்கு 5440 கன அடி தண்ணீர் வெளியேறி கடலுக்குச் செல்கிறது. கனமழை நேரத்தில் சரிவர நீரை தேக்கி வைக்க முடியாமல் 5000 கன அடி நீர் கடலில் சென்று கலந்து வருவது பொதுமக்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications