மாடுகளால் அநியாயமாக பறிபோன உயிர்.. பதறவைத்த சம்பவத்தால் நெல்லை மாநகராட்சி பிறப்பித்த அதிரடி உத்தரவு!
நெல்லை: நெல்லையில் மாடுகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக பைக்கில் வந்த நபர் மீது முட்டியதில் அவர் பறந்து விழ அவர் மீது பேருந்து ஏறி பலியானார். இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களிலும் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக பரபரப்பான நகரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கின்றன. பல சமயங்களில் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாகவும் மாடுகள் இருந்து வருகின்றன. அந்தவகையில் நெல்லையில் மாடுகளால் பரிதாபமாக ஒருவரின் உயிர் பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்த வேலாயுதராஜ் என்பவர், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்தார். இருசக்கர வாகனத்தில் அவர் நீதிமன்றத்திற்கு சென்றபோது சாலையில் இரண்டு மாடுகள் சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளன. அப்போது அந்த வழியாகச் சென்ற வேலாயுதராஜின் வாகனத்தில் மாடுகள் முட்டித் தூக்கியதில், நிலை தடுமாறி விழுந்தார் வேலாயுதராஜ்.
அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து, அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவலறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த சிசிடிவி வீடியோ பார்ப்போர் நெஞ்சை பதற வைத்துள்ளது.
மாடுகளால் வாகன விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுவதால் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்துச் சென்று, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில், சாலையில் மாடுகளை திரிய விடுபவர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது நெல்லை மாநாகராட்சி நிர்வாகம்.
மாடு வளர்ப்போர் பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரிக்க வேண்டும் என்றும் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால் மாநகராட்சி நிர்வாகம் அவற்றைப் பிடித்துச் சென்றுவிடும் எனவும் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெல்லை மாநகராட்சி ஆணையர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லையில் மாடுகளால் ஒருவர் பலியான சம்பவம் எதிரொலியாக மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்று ஒரே நாளில் நெல்லை மாநகராட்சிப் பகுதி சாலைகளில் உலா வந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றிடன் உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 13,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications