''திமுகவுக்கு உயிர் கொடுத்த இஸ்லாமிய சமூகம்''! இப்தார் விழாவில் சபாநாயகர் அப்பாவு நெகிழ்ச்சி!
நெல்லை: திமுக உயிரோட்டமாக இருக்கிறது என்றால் அதற்கு உயிர் கொடுத்த சமூகம் இஸ்லாமிய சமூகம் என சபாநாயகர் அப்பாவு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தற்போது ரமலான் மாதம் நடைபெற்று வருவதால் திரும்பிய பக்கமெல்லாம் இப்தார் விழாக்கள் களைக்கட்டி வருகின்றன.

அந்த வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு இதனைக் கூறினார்.
இஸ்லாமியர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்திருப்பதாகவும் இந்த அரசு இஸ்லாமியர்களுக்கான அரசு என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இஸ்லாமிய சமூக மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கக் கூடிய அரசு தான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், பிறருக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பதை முஸ்லீம் சமுதாயத்தை பார்த்து தான் தெரிந்துகொள்ள வேண்டும் என புகழாரம் சூடினார்.
குறிப்பாக கொரோனா காலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் இஸ்லாமிய இளைஞர்கள் ஏராளமானோர் தன்னார்வமாக மனிதாபிமானத்துடன் பங்கேற்றதை சுட்டிக்காட்டி அதற்காக பாராட்டினார்.

இஸ்லாமிய சமுதாயத்தினரின் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் என்றும் இன்னும் என்னென்ன கோரிக்கைகள் உள்ளனவோ அவைகளையும் முதல்வர் நிறைவேற்றுவார் என உறுதியளித்தார்.
நோன்பு திறப்பதற்கு முன்னர் நடைபெற்ற சிறப்பு துஆவில் தலையில் தொப்பி அணிந்து கலந்துகொண்ட அவர், துஆ ஓதும் போது இரு கைகளையும் ஏந்தி ஆமின் கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications